53670 பி.எட்.கணினி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு நாமம்.
அறிவியலில் ஒரு பகுதியாக கணினி அறிவியல் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததும்.,
இந்த அறிவிப்பை தடை செய்யவும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக கொண்டு வர போராட்டங்களும் உண்ணாவிரதம் நடத்தியதன் விளைவாக..,
இந்த போராட்டங்களை அடுத்து அரசு புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஆறாவது பாடமாக கொண்டுவர ஆலோசனை நடைபெறுவதாகவும், புதிய பாடத்திட்ட பணிகள் முடிவடைந்த பின்பு இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறிஉள்ளார்கள்.
ஆனால் தற்போது
SCERT நமது கோரிக்கைகளை ஏற்று
கணினி அறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாக வரஉள்ளதாக கூறி உள்ளது. இதனால் 53670 பி.எட்.கணினி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு நாமம் போட்டுவிட்டது. இதனால் அனைவருக்கும் அரசுவேலை வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அனைத்து பி.எட் கணினி பட்டதாரிகளும் வேடிக்கை பார்ப்பது தான்.